விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!

223 0

விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன் கல்யாண் என்ற தகவல் வெளியான பரபரப்பை கிளப்பி உள்ளது

இபிஎஸ், விஜய்க்கு ஃபோன் போட்டு சுமார் 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் பவன் கல்யாணின் பக்கா ப்ளான் இருந்ததாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டணி பற்றி முக்கியமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அரசியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் தவெக தலைவர் விஜய். இதுதொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் மேலும் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

சிக்கலில் தவெக

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவுவிட்டுள்ளது. இப்படி தவெகவிற்கு அரசியல் ரீதியாகவும் சரி, நீதிமன்றம் ரீதியாகவும் சரி அடுத்த அடுத்த பேரிடியாகவே விழுந்தது . இது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை

இந்தநிலையில் தான் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் விஜய்-க்கு ஆதரவாக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தனர். கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று வாக்குறுதியளித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி பரப்பரப்பான அரசியல் களத்துக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அக்., 06-ம் தேதி விஜய்-க்கு போன் போட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ஆறுதல் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று the prints இணையதளம் கட்டுரை எழுதியுள்ளது. மேலும் இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக  அதிமுக, தவெக தலைவர்கள் பேசியதாக பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது அதிமுக-தவெக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மேலும் இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 30 நிமிடம் நீடித்ததாகவும் அதிமுகவின் ஒரு தலைவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல இன்னொரு தலைவர் கூறுகையில், அதிமுக-தவெக கூட்டணி 2026 பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும், எங்களுக்கு பொது எதிரி திமுகதான் ஆகவே நாங்கள் இருவரும் கூட்டணி வைப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

தவெக தரப்பில் கேட்டதாக, விஜய்ஈபிஎஸ் பேசிய உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது மேலும் கூட்டணி தொடர்பாக கேட்கும் போது தற்போது அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது , எதுவாக இருந்தாலும் விஜய்தான் அறிவிப்பார் என்று நழுவியதாக தகவல் வெளியாகி உள்ளதுஅதேபோல அதிமுக உடன் கூட்டணி கிடையாது என்றும் அழுத்தம் திருத்தமான பதில் அவர்களிடம் இருந்து வரவில்லைஇதனை வைத்து பார்க்கும் போது அதிமுக-தவெக கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீனுக்கு வந்த பவன் கல்யாண்

விஜய்ஈபிஎஸ் பேச்சுவார்த்தை எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்குஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தான் காரணம் என சொல்கின்றனர்திமுகவின் தொடர் அரசியல் அழுத்தங்களை எதிர் கொள்ள நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசவேண்டும் என்று விஜய்-யிடம் பவன் கல்யான் ஐடியா கொடுத்ததாக பேச்சு அடிபடுகிறதுஇதற்கு விஜய் உடனே ஓக்கே சொன்னதும்இந்த தகவலை தனது சோர்ஸ் மூலம் அதிமுகவினர் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார் பவன் கல்யாண்இதனை அடுத்து இபிஎஸ் விஜய்க்கு போன் போட்டு கரூர் சம்பவம் தனது ஆறுதலை தெரிவித்ததாகவும்மேலும் நடப்பு அரசியல் பற்றி சுமார் 30 நிமிடம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுமேலும் இந்த பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் மன நிறைவாக இருந்ததாக பேச்சு அடிபடுகிறது.

Related Post

🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

Posted by - February 17, 2026 0
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு…

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *