மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

159 0

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடத்தியது தமிழக அரசு. அதற்கு ஒரு மாதம் முன்னதாகத்தான் (ஆகஸ்ட் 21) மதுரையில் தனது கட்சியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தினார் நடிகர் விஜய். இப்போது இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து ஒரு அரசியல் சர்ச்சை வெடித்திருக்கிறது.

மதுரையில் விஜய் மாநாடு கூட்டிய அதே நாளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களில் 20 சதவீதம் பேர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் (வழக்கமாக இது 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்குமாம்). “இவர்கள் தங்களது விடுப்புக்கான காரணங்களை வேறாகச் சொல்லி இருந்தாலும் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு செல்வதற்காகவே இவர்களில் பெரும்பகுதியினர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்” என்று அடித்துச் சொல்கிறார்கள் தென் மாவட்ட அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர்.மேலும் அவர்கள், “அரசுக்கும் இது அதிர்ச்சியளிக்கும் செய்திதான். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் விஜய் பக்கம் சாயலாம் என்று ஒரு கணிப்பு இருக்கும் நிலையில், விஜய் மாநாட்டுக்காக கல்லூரி மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றிருப்பதை சீரியஸாக எடுத்துக் கொண்டதால் தான் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுக் கல்லூரி மாணவர்களையும் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து இரவு 8 மணி வரை நேரலையும் செய்யப்பட்டது.இந்த நேரலையை அரசுக் கல்லூரி மாணவர்களை பார்க்க வைப்பதற்காக மாவட்ட நிர்வாகங்கள் பெரிய அளவில் மெனக்கிட்டன. இதன் தொடர்ச்சியாக, கல்லூரி மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை அவர்கள் மனதில் பதியவைப்பதற்காக தமிழகம் முழுவதுமே தொடர் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது அரசு. இந்த நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துவர வேண்டும், அவர்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றெல்லாம் கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்படுகிறது.” என்று சொன்னார்கள். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் இன்னும் யார் யாருக்கு எல்லாம் எனிமா கொடுக்கப் போகிறதோ!

Related Post

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

Posted by - November 22, 2025 0
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *