தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

212 0

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி விற்பனையாகிறது.

கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது. இன்று அக்.17-ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அதன்படி ட்ரம்ப் வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணம் உயர்வு, போர்ச் சூழல்கள் எனப் பல்வேறு அரசியல், பொருளாதார சூழல்களால் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி சிறிய முதலீட்டாளர்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது.அதேபோல் பிரிக்ஸ் நாடுகளும், டாலருக்கு மாற்றான சக்திவாய்ந்த கரன்சியை உருவாக்கும் முனைப்பில் உள்ளதால், அந்த நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம். இந்தியாவில் பண்டிகை காலம் என்பதாலும் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காண்கிறது. ஆனால், பண்டிகை காலம் என்பது தற்காலிக காரணம் தான். முக்கியக் காரணம் சர்வதேச பொருளாதார, அரசியல் சூழல்களே.அதன்படி இன்று (அக்.17) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனை ஆகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,03,000-க்கு விற்பனையாகிறது.

Related Post

புனேயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: கல்லூரி மாணவியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்

Posted by - June 28, 2023 0
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று…

சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

Posted by - August 21, 2023 0
ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம்…

கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி

Posted by - June 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில்…

முழு சுதந்திரம் கொடுத்த மோடி.. இறங்கி அடிக்க தயாராகும் இந்திய ராணுவம்.. உத்தரவு என்ன.?

Posted by - April 30, 2025 0
பிரதமர் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி போட்ட உத்தரவு என்ன தெரியுமா.? கடந்த 22-ம் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *