-
#Diwali
-
#HappyDiwali
-
#Diwali2023 (or current year)
-
#FestivalOfLights
-
#DiwaliCelebration
-
#DiwaliVibes
-
#IndianFestival
-
#Deepavali
-
#DiwaliDecorations
-
#DiwaliGifts
-
#DiwaliSweets
-
#DiwaliShopping
-
#LightUpYourLife
-
#JoyOfDiwali
-
#FestiveSeason
தீபாவளி முன்னிட்டு திருச்சி, மதுரை, கோவை, சென்னை, புதுச்சேரி, நாகை, ஈரோடு, தென்காசி பகுதிகளில் கடைவீதிகள் மக்கள் கூட்டம், பட்டாசு, ஆடைகள், பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.
மதுரை மாசி வீதிகளில் தீபாவளி பண்டிகைக்கான இறுதி கட்ட விற்பனை களைகட்டியது. புத்தாடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் மும்முரமாக இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் ஜன திரளாகக் இருந்த போதிலும் காவல்துறையினர் தொய்வின்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான தியாகராய நகரில், எதிர்பார்த்த அளவைவிட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தியாகராய நகரில் தீபாவளி ஷாப்பிங் செய்தனர்.
சலுகை விலையில் துணிகள் வாங்க சிறந்த இடமான பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு பகுதி, மக்கள் கூட்டத்தால் வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்பட்டது. சாலையின் இருபுறமும் கடைகளின் வாசல்களில் பல்வேறு சேலை ரகங்கள், பேண்ட் சர்ட்டுகள், சுடிதார்கள் என காட்சிக்காக தொங்கவிடப்பட்டு வாடிக்கையாளர்களை வரவேற்றன.
புதுச்சேரியில் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, தட்டாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சிலிண்டர் வெடி, அனுமன் கஜா, பேட்-பால் வெடி, பீக்காக், குஷி Gift box போன்றவை மக்களின் விருப்பமாக இருந்தது. பட்டாசு வெடிப்போரின் பாதுகாப்பிற்காக கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.