#happydiwali #festival #india #diwalidecorations #diwaligifts #love #diwalivibes #instagram #diwalidecor #deepavali #instagood #festiveseason #fashion #diwalihampers #festivevibes #homedecor #indianfestival #trending #pixeltamil #photography #diwalicelebration #celebration #festivaloflights #bhfyp #navratri #art #pixelmedia #pixeltv #festive pixeltamil.com
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகையின் போது எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.தீபாவளி பண்டிகை வந்தாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.
இந்து மத நம்பிக்கையின் படி நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் தான்.
அனைவரும் தீபாவளி என்று அதிகாலை எழுந்து புனித நீராடி புத்தாடை அணிந்துவிட்டு, பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். இந்த நாளில் முக்கியமான ஒரு விஷயமாக எண்ணெய் குளியல் பார்க்கப்படுகிறது.தீபாவளி அன்று காலை 3 மணியிலிருந்து 4;30 மணிக்குள் தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
தீபாவளி அன்று இந்த கங்கா ஸ்நானம் மேற்கொண்டால் கங்கையில் குளித்த பலனை பெறலாம் என்பது ஐதீகம். தீபாவளி அன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுடு தண்ணீரில் கங்கா தேவியும் வாசம் செய்வார்கள் என்றும் சீயக்காயில் வாயு பகவான் வாசம் செய்வதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி குளித்துவிட்டு காலை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது ஆறு மணிக்கு முன்பு பூஜைகளை செய்து முடித்து விட வேண்டும். இதுவே தீபாவளி கொண்டாடும் முறையாகும். மேலும் தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்தல் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பதும் நம்பிக்கையாகும்.