அடுத்த பிரச்சனை.. Jio, Airtel, Vi 10% விலை உயர்வு.. ரூ.299 பிளான் ரூ.329.. ரூ.349 பிளான் ரூ.384 ஆகுமா.. எப்போ?

175 0

இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே – பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது போன்றவைகளின் வழியாக மறைமுக விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea – Vi) ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் வரும் மாதங்களில் தத்தம் மொபைல் டேட்டா திட்டங்களின் விலைகளை சுமார் 10% அதிகரிக்கக்கூடும் (tariff hike) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் – டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர். கம்யூனிகேஷன்ஸ் டுடேவின் (Communications Today) அறிக்கையின் படி, ஜேபி மோர்கனின் (JP Morgan) கூற்றுப்படி, ஜியோவின் ஐபிஓவுக்கு முன் ஒரு மூலோபாய நடவடிக்கையாக 15% வரை சாத்தியமான விலை உயர்வு அமலுக்கு வரலாம். மேலும் கடந்த கால போக்குகளை கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை பின்பற்றும். இது செயல்படுத்தப்பட்டால், 2024 க்கு பிறகு, டெலிகாம் சந்தைக்கு வரும் முதல் நேரடி விலை உயர்வாக இது இருக்கும். மேலும் டெலிகாம் நிறுவனங்களானது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்கான திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், மறு மதிப்பீடு செய்யும் நேரத்தில் இந்த விலை உயர்வு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#airtel #vi #vodafonin #bsnl #jio

Related Post

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி – நிதி அமைச்சகம் தகவல்

Posted by - September 19, 2023 0
புதுடெல்லி: மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள்…

இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?

Posted by - August 21, 2024 0
இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?2024-25ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!

Posted by - December 1, 2025 0
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *