இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே – பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது போன்றவைகளின் வழியாக மறைமுக விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea – Vi) ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் வரும் மாதங்களில் தத்தம் மொபைல் டேட்டா திட்டங்களின் விலைகளை சுமார் 10% அதிகரிக்கக்கூடும் (tariff hike) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் – டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர். கம்யூனிகேஷன்ஸ் டுடேவின் (Communications Today) அறிக்கையின் படி, ஜேபி மோர்கனின் (JP Morgan) கூற்றுப்படி, ஜியோவின் ஐபிஓவுக்கு முன் ஒரு மூலோபாய நடவடிக்கையாக 15% வரை சாத்தியமான விலை உயர்வு அமலுக்கு வரலாம். மேலும் கடந்த கால போக்குகளை கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை பின்பற்றும். இது செயல்படுத்தப்பட்டால், 2024 க்கு பிறகு, டெலிகாம் சந்தைக்கு வரும் முதல் நேரடி விலை உயர்வாக இது இருக்கும். மேலும் டெலிகாம் நிறுவனங்களானது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்கான திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், மறு மதிப்பீடு செய்யும் நேரத்தில் இந்த விலை உயர்வு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#airtel #vi #vodafonin #bsnl #jio