ஏறிய வேகத்துல பாதாளத்துக்கு போயாச்சு.. ZOHO Arattai

148 0

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய வேகத்தில் ஜோஹோ அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது பர்சனல் சாட் மற்றும் குரூப் சாட் ஆகியவற்றுக்கு இ2இஇ (e2ee) என்னும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் (end to end encrypted) பாதுகாப்பை கொடுத்துள்ளது.

ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் ஆனது வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக களமிறங்கியது. உள்நாட்டின் தயாரிப்பாக இருந்ததால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரையில் அதை டவுன்லோட் செய்தது மட்டுமல்லாமல், அரட்டை ஆப் மீதான ஆதரவை தெரியப்படுத்தினர்.இந்த ஆதரவால் கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் 3,000 ஆக இருந்த புதிய சைன்-அப்கள் (Sign-Ups) அக்டோபர் தொடக்கத்தில் 1.5 லட்சமாக மாறியது. கிட்டத்தட்ட 100 மடங்கு வளர்ச்சியை கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது. அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே இந்த வீழ்ச்சியை பார்த்துள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், அப்படி ஏதும் கிடையாது என்பதை ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) நேரடியாக எக்ஸ் தளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். அனைத்து பர்சனல் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் இருக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான குரூப் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஆகவே, அரட்டை ஆப் ஆனது தனியுரிமை பாதுகாப்பை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இ2இஇ பாதுகாப்பில் இரண்டு ஆப்ஷன்களை அரட்டை ஆப் ஆனது கொண்டிருக்கிறது.

Related Post

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Posted by - December 20, 2023 0
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்…

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Posted by - November 21, 2025 0
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம்…

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்…

Posted by - December 5, 2024 0
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

Posted by - September 25, 2025 0
இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *