துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

217 0

தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கார் பந்தயம் நடத்த நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், யூடியுபர் ஒருவர், அண்மையில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேட்டியளித்திருந்தார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எக்ஸ் தளத்தில் நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய் பேசுவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பம் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திரையுலகிலும் தனக்கு பட வாய்ப்புகளை தரும்படியோ யாரிடமும் கேட்டதில்லை என்றும், தான் எப்போதும் பணத்திற்காக பேராசை கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.2013 ஆம் ஆண்டு முதல் கார் பந்தயம் தனது விருப்பமாக இருப்பதாக கூறியுள்ள நிவேதா, உண்மையில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்பட இருப்பது குறித்தும் தனக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - March 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

520 கிமீ தூரம்.. 12கிமீ வேகம்.. நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

Posted by - December 8, 2022 0
Cyclone Mandous | டெல்டா மற்றும் கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த…

தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

Posted by - December 27, 2024 0
“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.” தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *