சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

135 0

தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான லட்​சுமணன் எம்​எல்​ஏ-வுக்​கும் இடை​யில் மீண்​டும் உரசல் ஆரம்​பித்​து​விட்​டது.

எஸ்​ஐஆரைக் கண்​டித்து இண்​டியா கூட்​டணி சார்​பில் விழுப்​புரத்​தி​லும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இது லட்​சுமணனின் மத்​திய மாவட்ட எல்​லைக்​குள் வந்​த​தால் இதற்​கான ஏற்​பாடு​களை அவரே முன்​னின்று கவனித்​தார்.இந்த நிலை​யில், ஆர்ப்​பாட்​டத்​துக்​காக அச்​சிடப்​பட்ட நோட்​டீஸில், கூட்​ட​ணிக் கட்​சி​யான விசிக-​வின் பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் எம்​.பி-​யின் பெயரை​யும் திமுக மாநில விவ​சாய தொழி​லா​ளர் அணி​யின் செய​லா​ளர் அன்​னியூர் சிவா எம்​எல்​ஏ-​வின் பெயரை​யும் சிறிய​தாக போட்டு அவர்​களை இருட்​டடிப்பு செய்​து​விட்​ட​தாக சிலர் சர்ச்​சையைக் கிளப்​பி​னார்​கள்.இதைக் கண்​டித்து சமூக வலை​தளத்​தில் விசிக-​வினர் தங்​களது எதிர்ப்​பு​களை பதிவு செய்​தனர். உடனடி​யாக இதில் தலை​யிட்ட பொன்​முடி உடனடி​யாக, லட்​சுமணனை தொடர்பு கொண்​டு, “கூட்​ட​ணி​யில் முக்​கிய கட்​சி​யாக உள்ள விசிக-​வின் பொதுச்​செய​லா​ள​ரான ரவிக்​கு​மாரை ஏன் முன்​னிலை​யில் போட​வில்​லை…

அன்​னியூர் சிவா​வின் பெயரை ஏன் வரவேற்​புரை​யில் போட​வில்​லை? உங்​களோடு இருக்​கி​றார் என்​ப​தற்​காக, முன்​னாள் எம்​எல்​ஏ-​வான புஷ்ப​ராஜுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் கொடுக்​கிறீர்​களா? அப்​படி​யா​னால் விசிக வாக்கு நமக்கு தேவை​யில்​லை​யா? தலை​மை​யில் இருந்து கேள்வி கேட்​டால் இதற்​கெல்​லாம் யார் பதில் சொல்​வது? நோட்​டீஸை இறுதி செய்​வதற்கு முன்​பாக மண்டல பொறுப்​பாள​ரான அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்​துக்கு அனுப்பி ஒப்​புதல் பெற்​றீர்​களா?” என கேள்வி மேல் கேள்வி​களைக் கேட்டு துளைத்து எடுத்​து​விட்​டா​ராம்.

இதையடுத்து அந்த நோட்​டீஸை அப்​படியே வைத்​து​விட்டு ரவிக்​கு​மார் மற்​றும் அன்​னியூர் சிவா​வின் பெயர்​களை பெரி​தாகப் போட்டு புதி​தாக இன்​னொரு நோட்​டீஸை அடித்து அதை விநி​யோகம் செய்​திருக்​கிறது லட்​சுமணன் தரப்​பு. எடுத்த பதவியை திரும்​பக் கொடுத்​து​விட்​டால் விழுப்​புரத்​தில் விவ​காரம் இருக்​காது என்று நினைத்தே பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச் செய​லா​ள​ராக்​கியது தி​முக. ஆனால்​, நடப்​பது என்​ன​வோ அதற்​கு நேர்​ மாறாகத்​தான்​ இருக்​கிறது.

Related Post

சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்!

Posted by - December 17, 2025 0
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…

திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

Posted by - January 23, 2026 0
 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார். தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து…

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *