“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

129 0

புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு யாராவது போன் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தமிழகத்தை போல் புதுவையிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அதில் யாருக்காவது பூர்த்தி செய்ய தெரியாவிட்டால் அதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று பூர்த்தி செய்து கொடுத்து விடலாம். இந்த படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகள் சரிபார்த்தபிறகுதான் ஒவ்வொருவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் சிலருக்கு எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக பேசுவதாக கூறி ஓடிபி எண்களை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு யார் ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம். “எங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) சென்று பூர்த்திச் செய்து கொள்கிறோம்” என கூறி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இது போல் யாராவது போன் செய்தால் பிஎல்ஓ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். 0413 – 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், ‘cybercell-police@py.gov.in’ மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க ‘www.cybercrime.gov.in’ ஐ பயன்படுத்தவும் என தெரிவித்துள்ளனர்.

Related Post

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

Posted by - January 20, 2024 0
ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.…

என்னது, 2026ல் விஜய்தான் முதல்வரா! படத்தில் இடம்பெற்ற காட்சி.. வைரலாகும் போஸ்டர்

Posted by - July 9, 2025 0
விஜய் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதுவே அவருடைய கடைசி படமாகும்.…

வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

Posted by - December 10, 2024 0
#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு…

ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம்…

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *