நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீது நம்பிக்கை வைத்து, மறுபடியும் ஆட்சி பொறுப்பை பீகார் மக்கள் அளித்துள்ளனர். காங்கிரசுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதை நிலைதான் தமிழகத்திலும் வரும் என தெரிவித்தார்.
கூட்டணி தர்மத்தின்படி நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றுள்ளதாகவும் கூறினார். குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்களின் நிலை, இந்தியா முழுதும் இருக்கும் மக்களிடமும் உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவத்தார்.
பீஹார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.