90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

92 0

நாமக்கல்லில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த பெண்ணால் 34 வயது இளைஞரின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ப.வேலூர். இந்த ஊர் அருகே அமைந்துள்ளது பாண்டமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தற்போது பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 34 வயதான இவருக்கு வீட்டில் நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளனர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக மகாஸ்ரீ என்ற பெண் பழக்கம் ஆகியுள்ளார்.

இன்ஸ்டா காதல்:

இருவருக்கும் இடையேயான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மகாஸ்ரீயிடம் அவரைப் பற்றி ஸ்ரீதர் விசாரித்தபோது, அவர் தனக்கும் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், தனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்றும், தனது வயது 30 என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீதரிடம் மகாஸ்ரீ வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தனது வீட்டில் தனது காதலி மகாஸ்ரீ பற்றி பேசியுள்ளார். திருமணத்திற்கு முதலில் ஸ்ரீதர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நாமக்கல்லில் உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீதர் – மகாஸ்ரீ திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் மகாஸ்ரீ உறவினர்கள் வெகு குறைவாகவே பங்கேற்றனர். தங்களது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்ரீதர் மற்றும் மகாஸ்ரீ பதிவிட்டுள்ளனர்.

புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி:

இந்த நிலையில், நேற்று காலை ஸ்ரீதர் வீட்டிற்கு காரில் வந்த சிலர் திடீரென மகாஸ்ரீயை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மகாஸ்ரீக்கு 30 வயது இல்லை என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், மகாஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மகளுக்கு 15 வயதும், மகனுக்கு 13 வயதும் ஆகிறது. இதையறிந்த ஸ்ரீதர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மகாஸ்ரீயை தாக்கியது அவரின் முதல் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்க மறுத்த கணவன்:

கடுமையான அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளான ஸ்ரீதர் மற்றும் அவரது வீட்டார் மகாஸ்ரீயை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர், கடுமையான கைகலப்பு – பிரச்சினைக்குப் பிறகு மகாஸ்ரீக்கு அணிவித்த 5 சவரன் தாலிக்கொடியை திரும்ப பெற்றுவிட்டனர். மகாஸ்ரீயின் மகன் மற்றும் மகள் அவரது பெற்றோரின் பராமரிப்பில் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர்.

திருமணமான 3 நாளிலே ஸ்ரீதர் வாழ்வில் அரங்கேறிய சோகம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Posted by - November 27, 2025 0
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக்…

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - June 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *