அதிகாலையில் நில நடுக்கம்… மெகா சுனாமி அலர்ட்.?

136 0

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வார காலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இதன் காரணமாக மெகா சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலக்கடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சுனாமி அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 20ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவ்வப்போது சுனாமி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

98 அடி உயர சுனாமி அலர்ட்

இந்த நிலநடுக்கம் டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 90ஆயிரம் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாத நிலையில், அலையின் சீற்றம் மட்டும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய அளவில் அதாவது 8 ரிக்​டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக 98 அடி உயரத்திற்கு சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அரசு சார்பாக அலர்ட் விடுக்கப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது போல் இன்று ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.ஹோன்ஷுவின் பிரதான தீவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே 8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது குறைவான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 3 அடி உயரத்திற்கு மட்டுமே சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடல்கரையோத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

Related Post

புத்தாண்டு 2026 : புதிய தொடக்கம், புதிய நம்பிக்கை

Posted by - December 31, 2025 0
2026 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் புதிய எதிர்பார்ப்புகளும், வளர்ச்சிக்கான கனவுகளும் கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களை பாடமாக கொண்டு, முன்னேற்றம், அமைதி மற்றும் நம்பிக்கை…

நண்பேண்டா.. மோடியின் முதுகில் குத்தும் ட்ரம்ப்? உறவுக்கு கை கொடுத்து, துரோகத்திற்கு வலை?

Posted by - September 12, 2025 0
இந்தியா உடனான உறவை ஒருபக்கம் பாராட்டியபடியே, உலக நாடுகள் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கும் இரட்டை நிலைப்பாட்டு பணிகளை அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார். INDIA US Trade: ரஷ்யாவிடம்…

”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு

Posted by - August 13, 2025 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள்…

உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

Posted by - June 27, 2023 0
கீவ் : உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர்…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்!

Posted by - November 28, 2024 0
 இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *