அதிகாலையில் நில நடுக்கம்… மெகா சுனாமி அலர்ட்.?

160 0

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வார காலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இதன் காரணமாக மெகா சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலக்கடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சுனாமி அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 20ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவ்வப்போது சுனாமி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

98 அடி உயர சுனாமி அலர்ட்

இந்த நிலநடுக்கம் டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 90ஆயிரம் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாத நிலையில், அலையின் சீற்றம் மட்டும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய அளவில் அதாவது 8 ரிக்​டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக 98 அடி உயரத்திற்கு சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அரசு சார்பாக அலர்ட் விடுக்கப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது போல் இன்று ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.ஹோன்ஷுவின் பிரதான தீவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே 8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது குறைவான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 3 அடி உயரத்திற்கு மட்டுமே சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடல்கரையோத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

Related Post

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Posted by - March 24, 2026 0
அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்…

மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்!

Posted by - June 1, 2023 0
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத்…

கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு

Posted by - June 24, 2025 0
கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

Posted by - July 7, 2025 0
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான்…

AI சூழ் உலகு 17 – ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ – இது தேர்தல் கால அச்சுறுத்தல்

Posted by - April 4, 2024 0
  ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *