‘ஜனநாயகன் பொங்கல் இல்லை’ சென்சார் வழக்கில் திடீர் திருப்பம்.

53 0

ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார்.நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், “ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. அந்தப் புகாரை ஊக்கப்படுத்த முடியாது. ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு படத்தை எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், “மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள், விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.அதன்படி இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, ‘இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். ஆனால் இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது தலைமை நீதிபதி, “தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். சென்சார் வாரியம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.

Related Post

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

Posted by - April 22, 2024 0
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ்…

ரஜினியின் ஜெயிலர் பட கலெக்ஷனுக்கு நடுவில் வந்த விஜய்யின் லியோ பட தகவல்- இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?

Posted by - August 12, 2023 0
விஜய்யின் லியோ நடிகர் விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் வாரிசு, படம் ஹிட்டடிக்கும் என்று பார்த்தால் சொதப்பியது. அடுத்து அவர் யாருடன் கூட்டணி அமைப்பார்…

அண்ணையே எதிர்க்க முடிவெடுத்த அட்லீ.. என்ன இப்படி ஆகிருச்சு..

Posted by - March 15, 2023 0
விஜய் – அட்லீ விஜய் -அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியை தழுவியதே இல்லை. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை…

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - May 8, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.…

இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்.. இதுவரை கண்டிராத வசூல் சாதனை

Posted by - August 14, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கியிருந்தார். அளவுகடந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *