குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

111 0

குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் ஆர்வம் காட்டினர்.

பீகார் மாநிலத்தில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்து ஆண்களிடம் மிகப்பெரிய அளவில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் விசித்திரமான முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. அங்கு நவாடா நகரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘அகில இந்திய கர்ப்பிணி வேலை’ என்ற பெயரில் ஆன்லைன் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச  பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் இதில் கலந்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

காரணம், இந்த விஷயத்தில் கலந்து கொள்ளும் நீங்கள்  தோல்வியடைந்தாலும், பாதி பணம்   கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஒரு குறிப்பிட்டத்தக்க தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு பெண் மாடல்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு மேலும் ஆசையை அந்த கும்பல் தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பதிவு கட்டணம், ஹோட்டல் கட்டணங்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கட்டணங்களை இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களிடம் பல்வேறு முறைகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்தை ஈஸியாக பெறலாம் என நம்பி பலரும் பணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் தங்களிடம் இருந்த பணம் கரைந்ததை உணர்ந்த ஆண்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரை அணுகினால் வீணாக நம்முடைய பெயர் அல்லது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் யாரிடமும் வாயை திறக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் சென்ற நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் நவாடாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் நான்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பாலியல் தேடும் அனைத்து வயது ஆண்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு கும்பல் நவாடா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற கவர்ச்சிகரமான மற்றும் நம்ப முடியாத கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Related Post

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்

Posted by - August 28, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை…

டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

Posted by - December 10, 2024 0
இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

Posted by - August 15, 2024 0
Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *