குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

98 0

குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் ஆர்வம் காட்டினர்.

பீகார் மாநிலத்தில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்து ஆண்களிடம் மிகப்பெரிய அளவில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் விசித்திரமான முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. அங்கு நவாடா நகரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘அகில இந்திய கர்ப்பிணி வேலை’ என்ற பெயரில் ஆன்லைன் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச  பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் இதில் கலந்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

காரணம், இந்த விஷயத்தில் கலந்து கொள்ளும் நீங்கள்  தோல்வியடைந்தாலும், பாதி பணம்   கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஒரு குறிப்பிட்டத்தக்க தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு பெண் மாடல்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு மேலும் ஆசையை அந்த கும்பல் தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பதிவு கட்டணம், ஹோட்டல் கட்டணங்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கட்டணங்களை இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களிடம் பல்வேறு முறைகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்தை ஈஸியாக பெறலாம் என நம்பி பலரும் பணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் தங்களிடம் இருந்த பணம் கரைந்ததை உணர்ந்த ஆண்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரை அணுகினால் வீணாக நம்முடைய பெயர் அல்லது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் யாரிடமும் வாயை திறக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் சென்ற நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் நவாடாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் நான்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பாலியல் தேடும் அனைத்து வயது ஆண்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு கும்பல் நவாடா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற கவர்ச்சிகரமான மற்றும் நம்ப முடியாத கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Related Post

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது

Posted by - June 5, 2023 0
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

Posted by - March 1, 2024 0
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!

Posted by - December 1, 2025 0
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *