ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?

43 0

சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று, அதன் நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி வெளியிட்டார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியான கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.

“தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடியாக மாறும்“

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று கூறியதோடு, ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு, இன்னொரு ஆயித்தை சேர்த்து வழங்குவதால், தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக மாறும் என்று கூறினார்.

“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டது.?“

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பு குறித்து பேசிய அவர், இலவச பயணத்தை ஆண்கள் கேட்டார்களா என கேள்வி எழுப்பினார். மேலும், ஏற்கனவே போக்குவரத்துத் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பில் செல்வதாகவும், இப்போது இந்த செலவை எங்கிருந்து எடுப்பார்கள் என்றும், இது நல்ல திட்டமா, நஷ்டமா என கேள்வி எழுப்பினார்.

இலவச பேருந்து பயணம் என கூறும் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்துடன் அந்த பேருந்தில் செல்வாரா.? அந்த அளவிற்கு பேருந்து தரமாக இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய சீமான், இப்போது ஓடும் பேருந்துகள் கைலான் கடை இரும்பு போல் உள்ளதாக விமர்சித்தார்.

மேலும், ஏற்கனவே இலவசமாக பயணிக்கும் பெண்களிடம், நீ ஓசியில் தானே வருகிறாய், அப்படி ஓரமாக போய் நின்றுகொண்டு வா என்று பேருந்துகளில் கூறுவதை கேட்டதில்லையா என்றும் சீமான் வினவினார்.

“ஆக்கப்பூர்வமான திட்டத்தை சொல்லுங்கள்“

அதேபோல், வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விமர்சித்த அவர், ஏற்கனவே இரு ஆட்சிகளிலும் கோழிக் கூடு போல் வீடு கட்டிக் கொடுக்கப்படுவதாகவும், அவர்கள் யாராவது அந்த வீட்டில் போய் இருப்பார்களா என்றும் கேட்டார். மேலும், புதிதாக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டத்தை சொல்லச் சொல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

“மகளிர் வருவாய் ஈட்டும் அளவிற்கு வேலை கொடுங்கள்“

அதோடு, இலவச பேருந்து அல்லாமல், தரமான பேருந்தை வழங்கி, அதில் கட்டணம் செலுத்தி செல்லும் அளவிற்கு வசதியை மக்களுக்கு தரச் சொல்லுங்கள் என்று கூறினார். மேலும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம் வழங்காமல், 20 ஆயிரம் ரூபாய் ஈட்டும் அளவிற்கு தாய்மார்களுக்கு வேலை வழங்கச் சொல்லுங்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.

Related Post

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *