எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

60 0

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும் என தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. அக்கட்சி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “விஜய் பேசாமல் இருக்கும்போதே பேச வேண்டும் என கேட்கும் மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பேசினால் என்ன ஆகும் என்பதை எதிர்க்கட்சி நண்பர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் பேசினால் உங்கள் கதை முடிந்து விடும். காரணம் எதை, எப்போது, எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதையறிந்து அவர் பேசுவார். அப்படி விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவரின் ஆற்றலும், சிந்தனையும் நான் பார்க்கின்றபோது திரைப்படத்தில் மட்டுமல்ல உலகளவில் சிறந்த தலைவராக விஜய் வரப் போகிறார். தமிழ்நாட்டை ஆளப் போகிறார். ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டால், அவர் இருக்கும் வரை விஜய் தான் முதலமைச்சராக இருப்பார். ஒரு இளைஞர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க சினிமாவில் ரூ.500 கோடி வருவாய் தேவையில்லை என சொல்லி வந்திருக்கிறார். ஜனநாயகன் படம் நிறுத்தப்படாலும் கவலையில்லை. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக விஜய் வந்துள்ளார்.

எல்லா தலைவரையும் நான் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து 3ம் தலைமுறையாக புரட்சி தளபதி விஜயோடு நான் இணைந்து பயணிக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சகோதரனாக இருந்து என்னென்ன உதவிகளை செய்ய வேண்டுமோ செய்துக் கொடுப்பேன்.

234 தொகுதிகளையும் நான் கணக்கில் கொண்டு கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின், ஜனநாயகன் படம் முடக்கப்பட்டதற்கு முன், பின், அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்  பார்த்தால் நாம் 42 சதவிகிதம் இருக்கிறோம். எல்லா கட்சியும் சேர்ந்து 40 சதவிகிதத்தையும் எட்டிப் பிடிக்கவில்லை. இதனால் தான் டெல்லி நம்மை பார்த்து பயப்படுகிறது. தனிச்சையாக நம்மிடம் இவ்வளவு வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவதைக் கண்டு அதிர்கிறார்கள். விஜய் அறிக்கை விட்டால் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள்.

விருப்பமனு வாங்க 25 ஆயிரம் பேர் வந்தார்கள். போலீசாரே திணறி விட்டார்கள். பனையூர் அலுவலகம் வீதியில் இருப்பவர்கள் போராட்டம் நடத்தி விடும் அளவுக்கு சென்று விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 மணி நேரத்தில் 25 ஆயிரம் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ் மண்ணில் இருந்து யாரும் நீக்க முடியாது” என கூறியுள்ளார்.

Related Post

‘TVK’ விஜய் – தேமுதிகவின் உண்மையான பயம்?

Posted by - November 22, 2025 0
தேமுதிகவின் ‘மெகா’ பேரமும்… எதார்த்தத்தை உணர்த்திய ஸ்டாலினும்! – ஒரு அரசியல் பார்வை ​தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்பதற்கான முதல்…

டெல்லி செல்வது எதற்காக.? நாளை முக்கிய அறிவிப்பு உண்டா.? செங்கோட்டையன் பதில் இதுதான்

Posted by - September 8, 2025 0
டெல்லி பயணத்திற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது பயணம் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு உள்ளதா என்பதற்கும் என்ன…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

“பவளவிழா பாப்பா… நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா!” – திமுக மீது விஜய் தாக்கு

Posted by - November 13, 2025 0
தவெக-வின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்று அதிகார மயக்க முழக்கம் செய்வதாக திமுக தலைவரும், முதல்வருமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *