ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

8 0

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசு வரும் 2026-27 நிதியாண்டில் 1.79 லட்சம் கோடி ரூபாயை கடனாக பெற திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, மாநிலமானது வலுவான பொருளாதார வளர்ச்சியுடன், பெயரளவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பு 2025-26 ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும் எனவும், உண்மையான வளர்ச்சி 9 சதவிகிமாகவும், சராசரி பணவீக்கம் 5.5 சதவிகிமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் விவரங்கள்

வருவாய் வரவினங்கள்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வு உட்பட, மாநில அரசின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் 3,09,697.92 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிலையில்,  2026-27 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்த தொகையானது 3,44,575.31 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி, வரி அல்லாத வருவாய்:

மாநில அரசின் சொந்த வரி வருவாய், 2025-26 நிதியாண்டில் 2,06,540.36 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில்,  2026-27 நிதியாண்டில் 2,29,579.12 கோடி ரூபாயாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்த வரி அல்லாத வருவாய் 27 ஆயிரத்து 703 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 56,819.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய அரசின் வரிகளில் மாநில அரசுக்கான பங்கு, 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 62,530.65 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செலவின விவரங்கள்:

2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் செலவினங்கள் 3,93,271.63 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டிற்கானதை காட்டிலும் 3.79 சதவிகிதம் அதிகமாகும். இதில் ஊதிய செலவினங்களுக்கு மட்டுமே 94 ஆயிரத்து 377 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினமாக 18 ஆயிரத்து 735 கோடி ரூபாயாகவும், ஓய்வூதியம் தொடர்பான செலவினங்களுக்காக 45 ஆயிரத்து 323 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்காக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக 78 ஆயிரத்து 677 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடப்பு நிதியாண்டில் 51 ஆயிரத்து 442 கோடியை மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டிற்காக 59 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசின் நிதி, வருவாய் பற்றாக்குறை

2026-27 நிதியாண்டிற்கான இடைக்காலபட்ஜெட்டில் மாநில அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம், 3.00 சதவிகிதமாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் கடன் விவரங்கள்

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,79,809.65 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. அதேநேரம், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்த உள்ளது. இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2026-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவிகிதம் ஆக இருக்கும்”என தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி

Posted by - January 23, 2026 0
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” – விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

Posted by - September 15, 2025 0
தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளை கூட…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *