தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

100 0

தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டை என்று கூறப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டதும், எம்ஜிஆர் மதுரையிலும் போட்டியிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக-விற்கும், தென் தமிழகத்திற்கும் இடையே அதிக பிணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் அதிமுக-வின் வெற்றி எப்படி இருந்தது என்பதை கீழே காணலாம். 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தது. பின்னர், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 58 ஆக குறைந்தது.

1991ம் ஆண்டு:

1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தம் 164 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் தென் தமிழகத்தில் மட்டும் அதிமுக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1996ம் ஆண்டு:

1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி மீதான அதிருப்தியில் இந்த தோல்வியை அதிமுக எதிர்கொண்டது.

2001ம் ஆண்டு:

2001ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் மட்டும் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றியால் மீண்டும் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆனார்.

2006ம் ஆண்டு:

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் தென் தமிழகத்தில் அதிமுக மொத்தமாக 16 இடங்களில் வெற்றி பெற்றது.

2011ம் ஆண்டு:

மின்தடை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. மொத்தம் 150 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 33 இடங்களில் வெற்றி பெற்றது.

2016ம் ஆண்டு:

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை அதிமுக இந்த தேர்தலில் பிடித்தது. தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் அதிமுக வெற்றி பெற,  தென் தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த ஆட்சியின்போதுதான் ஜெயலலிதா காலமானார்.

2021ம் ஆண்டு:

ஜெயலிதா இல்லாமல் முதன்முறையாக பொதுத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 16 தொகுதிகள் தென் தமிழகத்தில் பெற்ற வெற்றி ஆகும்.

தென் தமிழகம் என்பது அதிமுக-வின் கோட்டையா? என்பது கடந்த கால தரவுகள் மூலம் அறியலாம். தென் தமிழகத்தில் அதிமுக-வின் அடையாளமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த நிலையில், முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை இணைக்கும் முக்கிய நபராக உள்ள தினகரன் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலா அதிமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் வசம் தென் தமிழகம் செல்லுமா? இல்லையா? என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்.

Related Post

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Posted by - January 18, 2026 0
ACTO-GEO அமைப்பு 2021 தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தப்…

“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

Posted by - December 17, 2025 0
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய்…

”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” – விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

Posted by - September 15, 2025 0
தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளை கூட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *