தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

64 0

தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டை என்று கூறப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டதும், எம்ஜிஆர் மதுரையிலும் போட்டியிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக-விற்கும், தென் தமிழகத்திற்கும் இடையே அதிக பிணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் அதிமுக-வின் வெற்றி எப்படி இருந்தது என்பதை கீழே காணலாம். 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தது. பின்னர், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 58 ஆக குறைந்தது.

1991ம் ஆண்டு:

1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தம் 164 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் தென் தமிழகத்தில் மட்டும் அதிமுக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1996ம் ஆண்டு:

1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி மீதான அதிருப்தியில் இந்த தோல்வியை அதிமுக எதிர்கொண்டது.

2001ம் ஆண்டு:

2001ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் மட்டும் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றியால் மீண்டும் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆனார்.

2006ம் ஆண்டு:

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் தென் தமிழகத்தில் அதிமுக மொத்தமாக 16 இடங்களில் வெற்றி பெற்றது.

2011ம் ஆண்டு:

மின்தடை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. மொத்தம் 150 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 33 இடங்களில் வெற்றி பெற்றது.

2016ம் ஆண்டு:

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை அதிமுக இந்த தேர்தலில் பிடித்தது. தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் அதிமுக வெற்றி பெற,  தென் தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த ஆட்சியின்போதுதான் ஜெயலலிதா காலமானார்.

2021ம் ஆண்டு:

ஜெயலிதா இல்லாமல் முதன்முறையாக பொதுத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 16 தொகுதிகள் தென் தமிழகத்தில் பெற்ற வெற்றி ஆகும்.

தென் தமிழகம் என்பது அதிமுக-வின் கோட்டையா? என்பது கடந்த கால தரவுகள் மூலம் அறியலாம். தென் தமிழகத்தில் அதிமுக-வின் அடையாளமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த நிலையில், முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை இணைக்கும் முக்கிய நபராக உள்ள தினகரன் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலா அதிமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் வசம் தென் தமிழகம் செல்லுமா? இல்லையா? என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்.

Related Post

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - February 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

‘செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ – கரூர் நெரிசல் விவகாரத்தில் அதிமுக கேள்வி

Posted by - October 2, 2025 0
சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *