பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

79 0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய்க்கு சவாலளிக்கும் வகையில் அவரது பெயரில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் அவர் பெரம்பூர் தொகுதியிலும், தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜோசப் விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்களா?

பொதுவாக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு சவாலாக திகழ்வார்கள் என்றால் பிற கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை களம் இறக்குவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் மட்டும் 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். சென்னையில் பெரம்பூர் தொகுதியில் தான் அதிக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  அதே சமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் கே.விஜய் என்ற சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் பெயரின் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ்.முருகன் பெயரில் பி.முருகன், எஸ் முருகன் பெயரில் இரண்டு பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனினும் வேட்புமனு பரிசீலனையில் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது ஒரே பெயரில் எத்தனை பெயர் போட்டி என்பது தெரிய வரும்.

Related Post

விஜய் சொன்ன முக்கிய தகவல்..

Posted by - February 2, 2026 0
தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம்…

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

Posted by - November 13, 2025 0
“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர்…

மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா !

Posted by - February 28, 2026 0
நடிகர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் நடிகர் விஜய் பிரபல…

செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

Posted by - November 27, 2025 0
சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில…

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - March 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *