TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

122 0

அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார், அப்போது தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை விஜய் இன்று வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள அவிநாசி சந்திப்பில் மக்களை சந்தித்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

100 சதவிகிதம் நம்பலாம்

இதனையடுத்து பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே என தனது உரையை தொடங்கிய விஜய், ஏப்ரல் 16ம் தேதி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிடுகிறோம். இப்போது சில வாக்குறுதிகளை தெரிவிக்கிறேன் என சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள், சிறு குறு வணிகர்களுக்கான வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார். பின்னர் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நீங்கள் இந்த விஜயை 100 சதவிகிதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன். நன்றி கடன் செலுத்த வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். அதனால் உங்களில் ஒருவனாக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கு விசில் புரட்சி தேவை. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்” என தெரிவித்தார்.

காவலர்களுக்கான வாக்குறுதிகள்

  • காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,200 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
  • அதிக மன அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மாதம் ரூ.1,000 பணிப் படியாகக் கூடுதலாக வழங்கப்படும்.
  • காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம் இயற்றப்படும். இதன் மூலம் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.
  • அதிக வேலைச் சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறை விடுமுறை உறுதி செய்யப்படும்.
  • காவலர்களுக்கான சலவைப் படியை ரூ.500 இலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
  • மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும்.
  • பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்புப் பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள்.
  • பெண் காவல்துறை பணியாளர்களுக்கு தனி ஓய்வறைகள் மற்றும் நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்.

Related Post

டெல்லி செல்வது எதற்காக.? நாளை முக்கிய அறிவிப்பு உண்டா.? செங்கோட்டையன் பதில் இதுதான்

Posted by - September 8, 2025 0
டெல்லி பயணத்திற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது பயணம் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு உள்ளதா என்பதற்கும் என்ன…

பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?

Posted by - August 12, 2025 0
ராமதாஸ் தலைமையில் வரும் 17ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக பல முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில்…

சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்!

Posted by - December 17, 2025 0
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

எங்களைத் தாண்டி தொடுங்க.. விஜய்க்காக களமிறங்கப்போகும் அதிமுக! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்

Posted by - October 6, 2025 0
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை காவல்துறையினர் கைது செய்தால் அவருக்காக அதிமுக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *