டெல்லி செல்வது எதற்காக.? நாளை முக்கிய அறிவிப்பு உண்டா.? செங்கோட்டையன் பதில் இதுதான்

121 0

டெல்லி பயணத்திற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது பயணம் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு உள்ளதா என்பதற்கும் என்ன கூறினார் தெரியுமா.?

முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்னர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பயணம் தொடர்பாக கூறியது என்ன தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்.

“ராமரை தரிசிக்க பயணம் – நாளை முக்கிய அறிவிப்பு இல்லை“

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் உறுதிபடக் கூறினார்.

டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க செல்கிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், தான் ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்வதற்காக செல்வதாகவும், அப்படி செய்தால் தனது மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பதால், டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்வதாக கூறினார். மேலும், பாஜக தலைவர்களை சந்திக்க தான் டெல்லி செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அதேபோல், நாளை எந்த முக்கிய அறிவிப்பையும் வெளியிடப் போவத்தில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ள செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் தனது தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும் மனநிலையிலும் இல்லையென்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அது உண்மைதான் என்பதை செங்கோட்டையன் தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்தார். மேலும், தனக்கு 2 வாய்ப்புகள் வந்தபோதும் அதை கட்சிக்காக தான் விட்டுக்கொடுத்ததாகவும் தெரிவித்த அவர், கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்றால், பிரிந்து சென்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினார்.

 

தற்போதைய சூழலில், வரும் 2026 தேர்தலில் அதிமுகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், பிரிந்து சென்ற அனைவரும், அதாவது, சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இணைத்து களம் கண்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடிவும் என்பதையும் செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்தார். 

அதோடு, பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தார். அப்படி இணைக்க முயற்சி எடுக்கவில்லையென்றால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற மனநிலை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பணிகளை செய்து முடிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் சவால் விடுத்தார்.

இந்த பேட்டிக்கு அடுத்த நாளே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Related Post

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

Posted by - February 24, 2026 0
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான…

இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்

Posted by - March 14, 2026 0
திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடையும் சூழ்நிலையில், விடுமுறை நாளான இன்று முக்கிய அரசுத் துறை அதிகாரிகளை பணியாற்ற மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். திமுக அரசின்…

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…

“கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!” செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Posted by - September 6, 2025 0
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில்  நேற்று வெளிப்படையாக தெரிவித்தேன், கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றார். கட்சி பொறுப்பில் இருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *