யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும்.
சிலருக்கு அசைவ உணவுதான் நிறைவைத் தரும். இதற்காக ஞாயிறு வரை காத்திருப்போரும் உண்டு. அதேசமயம் அசைவம் இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு அதிக கேடு என்னும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அளவுக்கு அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவது பல வகையான உடல் நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
அதில் முக்கியமாக அதிக யூரிக் அமிலம் உருவாவதை தூண்டும் என்கின்றனர். இந்த யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் சுரப்பதை hyperuricemia என்று அழைக்கிறார்கள். இது கீல்வாதம் போன்ற பல வகையான நோய்களை உண்டாக்கும். அப்படி அசைவ உணவு அதிகமாக சாப்பிடுவோருக்கு இரத்ததில் யூரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரிக்கும் என்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அம்ரேந்திர பதக் பேசுகையில் “ யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவு. இது கல்லீரலில் சுரந்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. பின் அது சிறுநீர் வழியாக வெளியேறும். யூரிக் அமிலம் 3 காரணங்களுக்காக அதிகரிக்கும். அதில் முதல் காரணம் மோசமான வாழ்க்கைமுறை, இரண்டாவது சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனையால் அதிகரிக்கும். மூன்றாவது அதிகமாக பியூரின் மற்றும் அசைவ உணவுகளை உட்கொளவதாகும். உங்களுக்கு அதிகமாக யூரிக் அமிலம் சுரக்கிறது எனில் ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது” என்று கூறுகிறார்.

யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது சில அறிகுறிகள் தென்படும். அவை..
