பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

211 0

திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும்.

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் இந்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது ஆசிரியர் கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். இதேபோல் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும் 15-ந்தேதி நடைபெறும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 16-ந்தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாறுதல்) 16-ந்தேதியும் நடைபெறும். கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீளத்தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் 17-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) மற்றும் அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 19-ந் தேதியும் நடைபெறுகிறது. அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 17-ந்தேதி நடைபெறும். இதே மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 18-ந்தேதி நடைபெறும். இடை நிலை ஆசிரியர் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 20-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆசிரியர்களுக்கு 22-ந்தேதியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் 23-ந்தேதியும் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு 24-ந்தேதியும், கலந்தாய்வு நடைபெறும். அரசு நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் வட்டத்திற்குள் 25-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 26-ந்தேதியும் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Post

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” – கடம்பூர் ராஜூ விமர்சனம்

Posted by - March 8, 2023 0
ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி தானாக விரும்பி…

இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய…

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

Posted by - August 26, 2024 0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது. கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *