பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

221 0

திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும்.

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் இந்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது ஆசிரியர் கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். இதேபோல் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும் 15-ந்தேதி நடைபெறும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 16-ந்தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாறுதல்) 16-ந்தேதியும் நடைபெறும். கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீளத்தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் 17-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) மற்றும் அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 19-ந் தேதியும் நடைபெறுகிறது. அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 17-ந்தேதி நடைபெறும். இதே மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 18-ந்தேதி நடைபெறும். இடை நிலை ஆசிரியர் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 20-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆசிரியர்களுக்கு 22-ந்தேதியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் 23-ந்தேதியும் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு 24-ந்தேதியும், கலந்தாய்வு நடைபெறும். அரசு நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் வட்டத்திற்குள் 25-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 26-ந்தேதியும் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Post

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலிமனை இடங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

Posted by - August 11, 2023 0
சென்னை: பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள்…

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்!

Posted by - March 10, 2025 0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த…

“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே அல்ல” – கவுரி கிஷன்

Posted by - November 11, 2025 0
பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று…

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *