16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்தப் போட்டியைக் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், மாலை முதலே மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஓவர்களைக் குறைத்தாவது போட்டி நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விட்டு விட்டு மழை தொடர்ந்தது. இதனால், போட்டியை ஒத்திவைப்பதாக இரவு 11 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் டே-வான இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஏற்கனவே பெற்ற டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி நேரில் கண்டுகளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Thunderstorms are expected in Ahmedabad today hopefully it happens before start of the match. Wind flow is perfect and there will be widespread thunderstorms today too. This time pakistan too will get them.
More updates if required later in the evening when thunderstorm form. pic.twitter.com/rVFLUv6LEh
— Tamil Nadu Weatherman (@praddy06) May 29, 2023
இந்த நிலையில் அகமதாபாத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’போட்டி தொடங்குவதற்கு முன் அகமதாபாத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.