கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி

325 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு  எரித்து கொன்ற மனைவி | Tamil News pooja vari palle near husband murder case  police inquiry

கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து மம்தா போலீசில் புகார் செய்தார்.போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கணவரின் தொல்லை தாங்க முடியாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மம்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். நள்ளிரவில் மம்தா கணவர் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஸ்ரீதர் வலியால் அலறி துடித்தார். ஸ்ரீதரின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் மாடிக்கு ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

சிறுவனை கொன்ற கல்நெஞ்ச தாயுடன் பயணம்: திக்… திக்… அனுபவங்களை பகிர்ந்த கார் டிரைவர்

Posted by - January 13, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். கருத்து வேறுபாடு காரணமாக…

தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Posted by - November 17, 2023 0
புதுடெல்லி: சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன்…

தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Posted by - December 25, 2025 0
இந்தியா ரயில்வே, தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது OTP (One…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

Posted by - December 27, 2022 0
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *