வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 மாடி கட்டிடத்தை நவீன எந்திரம் மூலம் தூக்கிய உரிமையாளர்

232 0

ஐதராபாத்:

ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையை விட தாழ்வான நிலைக்கு மாறின. இதன் காரணமாக மழை பெய்த போது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் அங்குள்ள 3 அடுக்கு மாடி வீட்டை சாலையை விட சற்று மேலே உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.

அதற்காக நவீன ஹைட்ராலிக் எந்திரத்தை வரவழைத்தார். கடந்த சனிக்கிழமை தனது வாடகை வீடுகளில் வசிக்கும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்குமாடி வீட்டை அடித்தளத்தில் இருந்து உயர்த்த உரிமையாளர் முயற்சி செய்தார்.

அப்போது 3 அடுக்குமாடி கட்டிடம் பக்கத்தில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் குத்புலாபூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.அப்போது ஹைட்ராலிக் எந்திரம் மூலம் கட்டிடத்தை தூக்கிய போது வாடகை வீடுகளில் 16 பேர் இருந்தனர் என்பது தெரிய வந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. இதையடுத்துக் கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஐதராபாத் மாநகராட்சி உத்தரவிட்டது. இதன் பேரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

Related Post

மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

Posted by - September 8, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Posted by - July 5, 2023 0
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு…

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

Posted by - August 1, 2025 0
யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை தேசிய பண பரிவர்த்தனை கழகம் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. அதன்படி GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *