பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர்.
அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் அறையில் பீரோ மற்றும் லாக்கரை திறக்க சாவி இல்லாததால், மாற்று சாவி மூலம் திறக்க இருவரை அமலாக்கத்துறையினர் அழைத்தனர். எனினும் அவர்களாலும் திறக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பீரோக்களை திறக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து 2 பீரோக்களும், திறக்கப்பட்டுள்ளதாக சாவி செய்யும் தொழிலாளி தெரிவித்துள்ளார்.
சென்னையில், அமைச்சர் பொன்முடியை பார்க்க வந்த மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை வாங்கி சோதனையிட்டதுடன், அமைச்சரை பார்க்க வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அவரை விடுவித்தனர்.அமலாக்கத்துறை சோதனையின்போது, சென்னையில் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் வந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவை அவர் வழங்கிவிட்டுச் சென்றார்.