தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

295 0

வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறினார். ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு போல மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.நெல்லை மாவட்டத்தில் உடனடியாக வெள்ளம் வடிந்துவிடும் என்றும், ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிய தாமதமாகும் எனவும் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையின் 17 குழுக்களில் 425 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் மேலும் 2 குழுக்கள் தூத்துக்குடிக்கு செல்வதாகவும் கூறினார்.உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர்,  1070 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.  12 ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் என பலர் தென் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.

Related Post

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

Posted by - May 8, 2025 0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 12 ஆம்…

எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Posted by - December 27, 2023 0
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில்…

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

Posted by - October 12, 2024 0
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில்…

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *