திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை

273 0

டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர் பயிற்சியில் நர்கிஸ் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், நர்கிஸ்க்கும் அவரது உறவினரான இர்பானுக்கும் திருமணம் செய்து வைக்க பேசப்பட்டுள்ளது. ஆனால், இர்பானுக்கு சரியான வேலை இல்லாததால் நர்கிசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை. A policeman was killed by an iron rod | இரும்பு கம்பியால் தாக்கி  போலீஸ்காரர் கொலை; 2-வது மனைவியிடம் போலீஸ் விசாரணைஇதனால், நர்கிஸ் இர்பானிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இர்பான், பயிற்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நர்கீஸை வழிமறித்த இர்பான் தன்னிடம் பேச வேண்டும் என்றும் பூங்காவிற்குள் வரும்படியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் நர்கீஸ் வர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரடைந்த இர்பான் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து நர்கீசை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இர்பான் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, நர்கிஸ் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் கொலை செய்ததாக இர்பான் போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், தேசிய தலைநகரான டெல்லி மிகவும் பாகாப்பற்று இருப்பதாக தெரிவித்தார். டெல்லி காவல்துறையின் பொறுப்புணர்வை சரிசெய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை இறப்புகள் நிகழ வேண்டும் என்று நான் மையத்திடம் கேட்க விரும்புகிறேன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Post

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

இனி ஸ்டைலாக மாட்டி செல்ல முடியாது: வாகன ஓட்டிகள் கழுத்தில் ஹெட்செட் அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Posted by - July 27, 2023 0
திருப்பதி: வாகனங்களில் செல்பவர்கள் தற்போது ஹெட்செட், இயர்போன் போன்றவற்றை கழுத்தில் அணிந்தபடி அதிகளவில் செல்கின்றனர். மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிய படியும், கழுத்தில் போன் ஹெட்…

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி

Posted by - August 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *