உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

310 0

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி.

எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 மாதங்களில் இம்மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த 60 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி.பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் இம்மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணி பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுOver 60 pregnant women found HIV positive in 16 months in UP hospital, probe  ordered - Sanj Samachar

இது தவிர, முன்னதாக இதே மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவர்களில் 35 கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்கனவே எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு தேவையான மருந்துகளை கொடுத்து வருகிறது. இது குறித்து மீரட் மருத்துவமனை அதிகாரி அகிலேஷ் மோகன் கூறுகையில், “மீரட் லாலா ரஜபத் ராய் மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பிரசவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். எவ்வாறு அவர்களுக்கு எய்ட்ஸ் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒரே மருத்துவமனையில் இந்த அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் அதிகமாக இருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. பொதுவாக பாலியல் உறவு, ரத்தம் பரிமாற்றம், ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. தாயிடமிருந்து பிரசவத்தின் போதும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது.

Related Post

”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Posted by - December 11, 2024 0
#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார் கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும்…

பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை….

Posted by - April 6, 2023 0
பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். சென்னை: பிரதமர்…

6 வயதில் முதல் இணையதளம்…11 வயதில் சொந்த நிறுவனம்…உலகின் இளைய பெண் CEO !

Posted by - December 9, 2024 0
World Youngest CEO – இந்தியாவின் – கேரளா மாநிலத்தில் கோழிகோடு நகரைச் சார்ந்தவர் தான் ஸ்ரீ லெட்சுமி சுரேஷ், 1998 யில் பிறந்தவர், தனக்கு 3…

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *