பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

216 0

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள் நட்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் தன் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்த போதும் வழக்கறிஞர் செந்தில்குமார் அந்தப் பெண்ணுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் இளங்கோவன், வழக்கறிஞரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்ணின் மூலம் வழக்கறிஞர் செந்தில் குமாரை தொடர்பு கொண்டு என் வழக்கு ஒன்று நீங்கள் வாதாட வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை நம்பிய வழக்கறிஞர் செந்தில் குமார் சேலம் வரும்படி கூறியுள்ளார். பின்னர் சேலம் வந்த அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு குரும்பபட்டி வன உயிரில் பூங்கா சென்றனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் கோரிமேடு பகுதியில் உள்ள பச்சியம்மன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.வழக்கறிஞர் செந்தில்குமார்

அப்போது அந்தப் பெண், தன் வழக்கு சம்பந்தமான டாகுமெண்டுகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும்படி கூறி கோரிமேடு அருகே உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்கனவே அவரை பின் தொடர்ந்து வந்த மதுரையை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது கூட்டாளிகள் வழக்கறிஞரை குண்டு கட்டாக காரில் தூக்கி சரமாரியாக தாக்கியப்படியே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது அங்கிருந்த காவல்துறை வாகனம், அந்த கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்து காரில் சிக்கிக் கொண்டிருந்த வழக்கறிஞர் செந்தில்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்களில் காரில் இருந்த இளங்கோவன் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்கினார். மேலும் உடன் வந்த நபர்களும் அந்த பெண்ணும் அங்கிருந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையம் மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Post

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

Posted by - November 21, 2024 0
அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால்…

குளிர்காலத்துல மாரடைப்பு வர அதிக வாய்பிருக்காம்… அவை வராமல் தடுக்க ‘நீங்க’ என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 5, 2023 0
குளிர்காலம் சுற்றுப்புறத்தை உறைபனியின் அமைதியான அடுக்கில் மூடுவதுடன், உங்கள் உடலுக்கு பல சாவல்களை வழங்குகிறது. குறிப்பாக இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம்…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! – சாதித்தது என்ன?

Posted by - May 6, 2023 0
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று செய்து,  மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன? 2021 சட்டமன்றத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *