சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

196 0

சாதி தலைவரா?

கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தார்.

இப்படத்தில் சாதி வெறி பிடித்தவராகவும், அரசியல் வாதியாக தத்துரூபமாக பகத் பாசில் நடித்திருப்பார். இவரின் நடிப்பு பாராட்டுக்கள் வந்தாலும், சிலர் ரத்தினவேலை சாதி தலைவராக சித்தரித்து சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.பகத் பாசில் நீங்களும் இப்படி செய்யலாமா.? பாவம்யா மாரிசெல்வராஜ்.. .

மாரி செல்வராஜ் ட்வீட்

இந்நிலையில் தற்போது பகத் பாசில் பிறந்த நாள் முன்னிட்டு மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன்.

ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

Related Post

இணையத்தில் எழுந்த ‘கருப்பு’ கிண்டல்கள்: காரணம் என்ன?

Posted by - September 15, 2025 0
இணையத்தில் திடீரென்று ‘கருப்பு’ படத்தினை முன்வைத்து பெரும் கிண்டல்கள் எழுந்தது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.…

Parasakthi:முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?

Posted by - January 10, 2026 0
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில்…

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - January 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023 0
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா…

உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Posted by - February 7, 2025 0
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *