சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அடுத்து அவர் ஹிந்தியிலும் தற்போது களமிறங்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதையை படமாக்கி இருந்த நிலையில் அந்த படம் பாக்ஸ் ஆபிசில் குறிப்பிடத்தக்க வசூல் பெறவில்லை. அதனால் பட தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் என கூறப்பட்டு வருகிறது.
ராமாயணம்
இந்த நிலையில் அப்போது ராமாயண கதையை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கபோகிறார். அந்த படத்தில் ராமராக ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க போகிறார்.
சீதையாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் வெளியேறிய நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி தான் சீதையாக நடிக்க போகிறார் என தகவல் பரவி வருகிறது.