4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விபரம் பின்வருமாறு-
-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளது.
11-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.15ம் தேதி துவங்க உள்ளது. 1-3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.22ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமும், 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும் சனிக்கிழமைகளில் வருகின்றன. இதன் அடிப்படையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 15 நாட்களும், மற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரையும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.