இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?

215 0

TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன்.

சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். போலீசார் அபராதம் விதித்துள்ள நிலையில், மீண்டும் விளம்பரம் தேடும் முயற்சியா? என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது போலீசாருடன் சர்ச்சையில் சிக்கவில்லை என்றால் தூக்கம் வராது என்பதுபோல.. மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். நம்பர் பிளேட் இல்லாத காரில் டிடிஎப் பயணித்ததன் பின்னணி என்ன?டிடிஎப் வாசன்

எம். பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலேஜ் ரோடு என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்களில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூபர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கிற்கு வந்தனர். டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால் அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கமலா திரையரங்கு வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வழக்கமாக போக்குவரத்து விதிகளை கண்டுகொள்ளாத டிடிஎப் வாசன், வந்திறங்கிய வெள்ளை நிற சொகுசுக் காரில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரியவந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்து துறை போலீசார் டிடிஎப் வாசன் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த வாசனுக்கு தகவல் தெரியவர விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார்.அங்கு வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, அந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார்.

ஆவணங்களை ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி வந்துள்ளனர் என்பது. நம்பர் பிளேட் இல்லாம காரை எடுத்து வந்ததற்கு 500 ரூபாயும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதற்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Related Post

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - December 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - August 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும்

Posted by - November 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *