தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

328 0

கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாகவே வைக்கலாம்.

ஆர்.சுந்தர்ராஜனின் மெல்லத் திறந்தது கதவு படம்தான்  ஏவிஎம் தயாரிப்பில் மோகன் நடித்த முதல் படமாகும். அதேபோல் எம்எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இணைந்து இசையமைத்த முதல் படமாகும். இப்படி மெல்லத் திறந்தது கதவுக்கு நிறைய சிறப்புகள் இருந்தாலும், தியேட்டர் ஆபரேட்டரால் தலைவிதி மாற்றி எழுதப்பட்ட படம் இது என்பதே இதன் ஆகப் பெரிய சிறப்பு.

திரைக்கதையை ரசிகர்களின் உணர்ச்சிகளுக்கேற்ப எழுத வேண்டும். சற்று பிசகினாலும் ஏமாற்றமாகிவிடும். வெகுமக்கள் தங்களின் கவலைகளை மறக்க, சற்று நேரம் களித்திருக்க திரையரங்குக்கு வருகிறார்கள். எனவே பொழுதுப்போக்கை மையப்படுத்தியப் படங்கள் அவர்களை உற்சாகம் குன்றாமல் வைத்திருக்க வேண்டும். கிளைமாக்ஸில் அவர்களை அழ வைத்து அனுப்பக் கூடாது. அப்படி அழ வைத்த படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன என்றாலும், குதூகலப்படுத்தி அனுப்பினால் வெற்றியின் சதவீதம் கூடும்.

மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகனும், ராதாவும் குழந்தைப் பருவ நண்பர்கள். மோகன் பட்டணத்துக்குச் சென்று படித்துவிட்டு, இளைஞனாக கிராமத்துக்கு திரும்புவார். ராதாவுக்கு அவர் மீது கொள்ளைப் பிரியம், காதல். ராதாவின் தந்தை இறந்து போக, மோகனின் தந்தை ராதாவுடன் மோகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பார். மோகன் மறுப்பார். ராதாவின் தாயும் இறந்து போவார். மோகன் ராதாவை ஏற்க மறுக்கக் காரணம் அமலாவுடன் அவருக்கிருந்த காதல். அமலா இறந்து போனதால் வேறு யாரையும் திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் மோகன் இருப்பார். இதனை அறிந்த ராதா, தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயல, மோகன் அவரை காப்பாற்றி, ராதாவின் காதலை ஏற்றுக் கொள்வது கதை.

ராதா மோகன் மீது கொண்டிருக்கும் காதல் முதல் பாதியிலும் மோகன் அமலா  காதல் இரண்டாம் பாதியிலும் வரும். முன்னது லைவான கதை. பின்னது பிளாஷ்பேக். முன்னதுதான் மோகனும், ராதாவும் சேர்கிற மகிழ்ச்சியான முடிவை கொண்டது. மெல்லத் திறந்தது கதவு படத்தில் அருமையான பாடல்கள் இருந்த போதிலும் படம் வெளியான போது சுமாராகவே போனது. இந்நிலையில், மதுரை சினிப்ரியா திரையரங்க ஆபரேட்டர் படத்தின் முதல் பகுதியில் வரும் ராதா – மோகன் கதையை பிற்பகுதியிலும், மோகன் – அமலா கதையை முற்பகுதியிலுமாக மாற்றி ஓட்டினார். இப்போது படம் முதலில் இருந்ததைவிட கேட்சிங்காக ரசிகர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் மாறியது. முதலில் சோகம், பிறகு மகிழ்ச்சி என்று திரைக்கதை மாறியதும் தியேட்டரில் கூட்டம் அம்மியது. ஏவிஎம் உடனடியாக முற்பகுதியையும், பிற்பகுதியையும் மாற்றி புதிய சென்சார் சான்றிதழ் வாங்கி படத்தை மாற்றி வெளியிட்டது. படமும் பிக்கப்பாகி வெற்றி பெற்றது.

தியேட்டர் ஆபரேட்டர்கள் இதேபோல் பல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். நாம் என்ன படம் எடுத்தாலும், ஆபரேட்டர்களின் ரசனைக்கு ஏற்பவே அவை திரையில் ஓட்டப்படும். ஒரு பாடல் பிடிக்காவிட்டால் இல்லை ரசிகர்கள் அந்தப் பாடலை லேகாக உணர்கிறார்கள் என்று ஆபரேட்டருக்குத் தோன்றினால் அது எடிட் செய்யப்படும். அது எத்தனை பெரிய இயக்குனரது படமாக இருந்தாலும். மெல்லத் திறந்தது கதவு போல் முற்றாக திரைக்கதையை மாற்றுவது நடப்பதில்லை.

Related Post

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - February 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

Posted by - April 20, 2023 0
முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.   விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி…

Easy Tips:உடல் எடையை குறைக்க ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட டயட் மற்றும் டிப்ஸ்…

Posted by - February 18, 2025 0
ஹன்சிகா மோத்வானி நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக கடந்த 2003ம் ஆண்டு நடிக்க தொடங்கியலர் 2007ம் தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம்…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

குடும்பம், பிள்ளைகளை மறந்துவிடு.. மருமகள் ஜோதிகாவிடம் மாமனார் சிவகுமார் இப்படி சொன்னாரா

Posted by - December 19, 2023 0
நடிகை ஜோதிகா திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *