பூரிக்கு உருளைக்கிழக்கு இல்லாமலே ருசியான மசாலா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க…

219 0

உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? பூரிக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கைக் கொண்டு தான் மசாலா செய்வீர்களா? ஆனால் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொண்டால், அதனால் வாய்வு தொல்லையால் அவதிப்படக்கூடும். எனவே உருளைக்கிழங்கை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது.

சில சமயங்களில் பூரி செய்ய நினைத்தால், வீட்டில் உருளைக்கிழங்கு இருக்காது. இந்நிலையில் உருளைக்கிழங்கை சேர்க்காமலேயே சுவையான பூரி மசாலா செய்யலாம். இந்த பூரி மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.பூரிக்கு உருளைக்கிழக்கு இல்லாமலே ருசியான மசாலா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு  பாருங்க... | Poori Masala Without Potato Recipe - Tamil BoldSky

உங்களுக்கு உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பூரி மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் . 1 டீஸ்பூன்

* பச்சை பட்டாணி – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* பச்சை மிளகாய் – 4

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 6 பல்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கடலை மாவை நீரில் கரைத்து, அதையும் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலா தயார்.

Related Post

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

Posted by - July 10, 2023 0
ரவீந்தர்-மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர்கள்…

மனைவி தங்கள் கணவனிடம் ஒருபோதும் பேசக்கூடாத விஷயங்கள்..

Posted by - December 17, 2025 0
கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, சிறிய விஷயங்களைப் பெரிதாக்காமல் முன்னேறினால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.அன்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியவை வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு மூன்று முக்கிய…

ரூ.18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

Posted by - January 9, 2026 0
பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா

Posted by - April 4, 2023 0
முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் – அரை கிலோ வரமிளகாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *