பூரிக்கு உருளைக்கிழக்கு இல்லாமலே ருசியான மசாலா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க…

211 0

உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? பூரிக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கைக் கொண்டு தான் மசாலா செய்வீர்களா? ஆனால் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொண்டால், அதனால் வாய்வு தொல்லையால் அவதிப்படக்கூடும். எனவே உருளைக்கிழங்கை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது.

சில சமயங்களில் பூரி செய்ய நினைத்தால், வீட்டில் உருளைக்கிழங்கு இருக்காது. இந்நிலையில் உருளைக்கிழங்கை சேர்க்காமலேயே சுவையான பூரி மசாலா செய்யலாம். இந்த பூரி மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.பூரிக்கு உருளைக்கிழக்கு இல்லாமலே ருசியான மசாலா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு  பாருங்க... | Poori Masala Without Potato Recipe - Tamil BoldSky

உங்களுக்கு உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பூரி மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் . 1 டீஸ்பூன்

* பச்சை பட்டாணி – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* பச்சை மிளகாய் – 4

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 6 பல்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கடலை மாவை நீரில் கரைத்து, அதையும் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலா தயார்.

Related Post

கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.. விஜய் ஆண்டனி மேடையில் உருக்கம்

Posted by - May 28, 2025 0
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து பிரபலம் ஆகி அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர். பிச்சைக்காரன் படம் அவர் கெரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால்…

உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா… அப்போ வாங்க மொறு மொறு கார போண்டா செய்யலாம்.!

Posted by - February 26, 2024 0
நாம் இன்று இங்கே பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டில் உள்ள இட்லி மாவை வைத்து சூடான மொறு மொறு போண்டா எப்படி செய்யலாம் என்று தான். ஒரு சிலருக்கு…

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

Posted by - June 8, 2023 0
குக் வித் கோமாளி 4 விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *