கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

223 0

திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின் கதவை உடைத்து கத்திமுனையில் கொள்ளையடிக் கிறார்கள்

சமீபகாலமாக, குற்றச் செயல்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகம் தழுவிய அளவில் 15 பேர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, ஒரே நாள் இரவில் சென்னையில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஈரோடு அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி கொல்லப்பட்டதில் தொடங்கி, திருமழிசையில் ரெளடி எபினேசர் கொல்லப்பட்டது வரை, எங்கு பார்த்தாலும் ரத்தக்கறையாகக் காட்சியளிக்கிறது தமிழகம். ரெளடிகளுக்குள் நடக்கும் ‘கேங் வாரில்’ நாட்டு வெடிகுண்டுகள் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் எந்தவித அச்சமும் இல்லாமல் ஈடுபட்டுவருகிறார்கள் குற்றவாளிகள்.

சிவகங்கை மாவட்டம், வீரவலசை கிராமம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளைக் காட்டி மிரட்டி நடத்துனரிடம் இருந்த பணப்பையைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். பணியின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறை மார்தட்டிக்கொள்கிறது. ஆனால், நடக்கும் சம்பவங்கள் எல்லாமே, ‘குற்றம் செய்பவர்களுக்குக் காவல்துறைமீது துளியும் அச்சம் இல்லை’ என்பதையே உணர்த்துகின்றன. “என்னாச்சு சட்டம்-ஒழுங்கு… என்ன செய்கிறது காவல்துறை?” என்று கேட்கிறார்கள் மக்கள்.

Related Post

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…

மணமகன் கட்டிய தாலியை கழற்றி வீசிய இளம்பெண்: உறவினர் பெண் திடீர் மணமகள் ஆனார்

Posted by - September 4, 2023 0
போளூர்: போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று…

எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

Posted by - December 15, 2023 0
சென்னை: சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Selfie Video எடுத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் சத்தம், வெளியான தரமான வீடியோ!

Posted by - December 30, 2023 0
#NellaiWelcomesTHALAPATHY pic.twitter.com/oxXyD3SuJr — RAJA S (@Raja01_Tvk) December 30, 2023 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை…

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *