மீண்டும் அமலுக்கு வந்த Containment Zone, lockdown வார்த்தைகள்! கொரோனா- நிபா இடையே இத்தனை ஒற்றுமைகளா?

187 0

திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது கேட்ட லாக்டவுன், கன்டெய்ன்மென்ட் ஜோன் போன்ற வார்த்தைகள் கேட்ட நிலையில் தற்போது நிபா வைரஸுக்கும் அதே வார்த்தைகள் கேட்கின்றன.

2019 ஆம் ஆண்டு இறுதியில் உலக நாடுகளை ஆட்டி படைத்த கொரோனா 3 ஆண்டுகளாகியும் இன்னும் முழுசாக விலகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கன்டெய்ன்மென்ட் ஜோன், ஐசோலேஷன், லாக்டவுன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.

எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகள் கன்டெய்ன்மென்ட் ஜோன் (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியே வரவும் கூடாது, வெளியாட்கள் உள்ளே செல்லவும் முடியாது. தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும்.பழைய மாதிரியே நடக்குதே.. சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா! தீவிர ஊரடங்கு.. மக்கள் கொந்தளிப்பு | Increase in the spread of Corona, Protest against lockdown in ...

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகும். கொரோனா பாதிப்பின் பாசிட்டிவிட்டி ரேட் 10 ஐ தாண்டியதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் நோய் பரவலை தடுக்கும் யுத்திதான் லாக்டவுன். இத்தகைய வார்த்தைகள் 2021 ஆம் ஆண்டு வரை கேட்டுள்ளோம். அதன்பின்னர் படிப்படியாக கொரோனா விதிகள் திரும்ப பெறப்பட்டன. இந்த நிலையில் தற்போது நிபா வைரஸ் என்ற உயிர் கொல்லி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா, புதுச்சேரியில் நிபா பாதிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிபா வைரஸானது மலேசியாவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதித்த மனிதர்களிடம் இருந்து உடல்நலம் பாதித்த பன்றிகள், அதன் திசுக்களில் இருந்து பரவி வருகிறது. நிபா வைரஸ் பாதித்த நபர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, தொண்டையில் எரிச்சல், தசைகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இந்த வைரஸ் பாதித்தவுடன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும். சிலருக்கு இந்த நோய் பாதிப்பு அறிகுறியாக மயக்கம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாடக் கூடாது. கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கும் நிபா வைரஸுக்கும் இருக்கும் ஒற்றுமையை பார்ப்போம்:
  • கொரோனா, நிபா பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்படுகிறது.
  • கொரோானாவை போலவே நிபாவை கண்டறிய RT PCR எனும் சோதனை செய்யப்படுகிறது
  • கொரோனாவை போல் நிபாவும் நிமோனியாவை உருவாக்குகிறது.
  • கொரோனாவை போல் நிபாவும் நுரையீரல் நோய்களை உண்டாக்குகிறது.
  • முதலில் கொரோனாவுக்கும் தடுப்பூசி இல்லாத நிலையில் பிறகு கண்டறியப்பட்டது. அதை போல் நிபாவுக்கும் மருந்து இல்லை.
  • நிபாவும் கொரோனாவை போல் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
  • கொரோனாவும் நிபாவும் வேரியண்ட்களை மாற்றுகிறது.

Related Post

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

Posted by - March 12, 2025 0
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் புதுச்சேரியில் 21 வயது முதல் 55…

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

Posted by - July 6, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார்…

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண் கொலை- காதலன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

Posted by - June 30, 2023 0
திருப்பதி: சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக…

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

Posted by - August 7, 2023 0
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *