மாரிமுத்து
தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து. இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக இந்தம்மா ஏய் என இவர் பேசும் வசனம் மீம் ஆக மாறியது. மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்துவின் உடலை அவருடைய சொந்த ஊரில் தகனம் செய்தனர்.
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக வேறு யார் நடிக்க போகிறார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
மாரிமுத்து தம்பியின் முடிவு
இந்நிலையில், தன்னுடைய அண்ணன் இடத்தை தானே நிருபுகிறேன் என மாரிமுத்துவின் தம்பி கூறியுள்ளார்.

ஆம், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என மாரிமுத்துவின் தம்பி கூறியுள்ளாராம். அல்லது வேறு எந்த நடிகர் நடித்தாலும், நான் டப்பிங் கொடுக்கிறேன் என அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.