ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

202 0

அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில், தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த டீசரும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கூலி படத்தில் அனுமதியின்றி, தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

 

அதில், கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்திலும் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

எனவே, கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.அண்மையில், இளையராஜா இசை குறித்து வைரமுத்து விமர்சித்த நிலையில், அதற்கு கங்கை அமரன் எதிர்வினையாற்றி இருந்தார். இத்தகைய சூழலில், இளையராஜா தனது இசை குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இர்பான் நடத்திய Gender Reveal பார்ட்டி. வீடியோவிற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.

Posted by - May 21, 2024 0
குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பிரபலம் தெரியாதவர்கள் யாரும்…

கயல் சீரியல் முடியபோகிறதா? திருமணத்துக்கு பின் ஹீரோயினே கொடுத்த பதில்

Posted by - October 19, 2024 0
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இந்த சீரியல் இருந்து வருகிறது.…

ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

Posted by - April 16, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது போதைக்கு அடிமையான கோபியிடம் சண்டை போட்டுவிட்டு ராதிகா சென்றுவிட்டார். அதன் பின் கோபி குடிபோதையில் தள்ளாடுவதை பார்த்து செழியன் அவரை பாக்யாவின் வீட்டுக்கு…

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா… அப்போ இந்த கோயில்களுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!

Posted by - November 23, 2024 0
நமது கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேர்ந்தால் கோடீஸ்வரராக மாறுவது என்பது கடினமான ஒன்றல்ல. ஆனால் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு சில கோவில்களுக்கு சென்று வந்தால்…

சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா

Posted by - April 4, 2023 0
முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் – அரை கிலோ வரமிளகாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *