தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார் என்றே சொல்லலாம்…
மேலும் கடந்த இரண்டு வருடமாக அரசியலுக்கு வரும் விதத்தில் பல வேலைகளை விஜய் செய்து வருகிறார். அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது..10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு பரிசு தொகை கொடுத்து பாராட்டியது என்றும் சொல்லலாம்..
தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில்..பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகின்றது….இது தொடர்பாக தளபதி பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் விசாரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தகவல் வந்து இருக்கின்றது…

இதில் தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமார் பூத் கமிட்டி தகவல் வெளியிடுவதில் சிக்கல் செய்து இருப்பது தெரியவர நடிகர் விஜய் அவரை கடுமையாக எச்சரித்தது மட்டும் இன்றி இனி இப்படி நடக்கவே கூடாது என அவருக்கு முக்கிய தகவலை சொல்லி அவரை திட்டி இருக்கின்றார்…
தளபதி விஜயின் இந்த திடீர் நடவடிக்கை அவரின் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்…பலரும் இவரின் இந்த முடிவு விரைவில் மக்கள் மத்தியில் தெரியும் என சொல்லப்பட்டு வருகின்றது..அவர் அரசியல் வருவதின் முதலிலே இப்படி குளறுபடியா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.