உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறிருப்பதாவது :
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு செய்கிறீர்களா இல்ல அல்லது சீமானுக்கு பயந்து செய்தீர்களா? கனவில் வந்து யாரும் சொன்னார்களா? முதலில் கல்வியை தரமாக கொடுங்கள்.
மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையை மறித்து அந்த கார் ரேஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஒலிம்பிக்கில் இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு தங்கம் கூட வெல்ல முடியவில்லை.
சாலைகள் மோசமாக உள்ளது. மழை பெய்தால் தேங்கும் நிலையில் உள்ளது. இப்போது இந்த கார் பந்தயம் தேவையா..? மக்கள் பணத்தில் நடத்தப்படும் இந்த கார் பந்தயம் ரொம்ப அவசியமா என சீமான் தெரிவித்துள்ளார்.