ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா இருக்கும்…

193 0

நீங்கள் மார்கெட்டுகளில் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும், பலருக்கும் எப்படி இதை சமைப்பது என்று ஒரு கேள்வி எழும். நீங்கள் இந்த ப்ராக்கோலியை வாங்கி சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ப்ராக்கோலியைக் கொண்டு குருமா செய்யுங்கள்.

இந்த ப்ராக்கோலி குருமா சப்பாத்தி, சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ப்ராக்கோலி சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய காய்கறியும் கூட. அடிக்கடி இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி இருக்கும்.

உங்களுக்கு ப்ராக்கோலி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா  இருக்கும்... | Broccoli Kurma Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* ப்ராக்கோலி – 1 (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – சிறிது

வதக்கி அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 3

* பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் – 1/4 கப்

செய்முறை:

* முதலில் ப்ராக்கோலியை உப்பு மஞ்சள் தூள் சேர்த்த சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ப்ராக்கோலியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

* பின் அதில் பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாற வதக்கியதும், தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் ப்ராக்கோலியை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ராக்கோலி குருமா தயார்.

Related Post

நாய்கள் இடதுபுறம் வாலாட்டினால்.. கொலைவெறியாம்!

Posted by - January 19, 2024 0
நாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டி னால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்துவிடாதீர்கள். நாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம்…

அடிக்கடி சார்ஜ் போடும் பழக்கம்.. மொபைல் போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் தெரியுமா? இந்த தவறை செய்யாதீங்க..

Posted by - March 7, 2024 0
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கேமரா, டிஸ்பிளே போன்றே பேட்டரி மற்றும் ஃபாஸ்ட்…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

Posted by - January 7, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா…

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

Posted by - March 13, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை…

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

Posted by - March 18, 2023 0
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *