நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!

271 0

இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

பண்டைய காலம் முதல் இன்று வரை நாம் பின்பற்றி வரும் பாரம்பரிய முறைகள் மிகவும் பிரபலமானதாகவும், பல நன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அப்படியொரு பாரம்பரிய முறை கைகளால் உணவை சாப்பிடுவது. நம் முன்னோர்கள் முதல் இன்றுவரை பலர் கைகளால் உணவை சாப்பிடுவதற்கு காரணம் உள்ளது.

நீங்கள் கைகளால் சாப்பிடும்போது, உணவை ரசித்தும், முழுமனதுடனும் சாப்பிடலாம். மேலும், இவை குடல் மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் பல்வேறு நன்மை வழங்குகிறது. கையால் உண்பதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் மற்றும் நன்மைகள் என்னெவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே  ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க! | Scientific Reason Behind Eating With Hands And  Benefits In ...

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு விரலுக்கும் சில ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. இது உணவு மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. கட்டைவிரல் அக்னி (நெருப்பு), ஆள்காட்டி விரல் வருணன் (காற்று), நடுவிரல் ஆகாஷ் (ஆகாயம்), மோதிர விரல் பிருத்வி (பூமி), மற்றும் சுண்டு விரல் ஜலம் (நீர்) ஆகியவற்றுடன் இணைக்கிறது. கைகளால் உண்ணும் போது, ஒவ்வொரு விரலும் குறிக்கும் உறுப்பைக் கொண்டுவருவதாகவும், அவை உள் உடல் செயல்பாட்டை முழுவதுமாகச் சமநிலைப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இது உங்களுக்கு முழுமை உணர்வை அளிப்பதோடு, நீங்கள் சாப்பிடும் உணவை சரியாக ஜீரணிக்கும்

நிபுணர்கள் கூறுவது

சுகாசன தோரணையில் கைகளால் சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுகாசன தோரணை என்பது தரையில் சம்மனங்கால் போட்டு அமர்ந்திருக்கும் நிலையில் சாப்பிடுவது. பாரம்பரிய முறைப்படி இப்படி சாப்பிடுவது, உங்கள் உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இது வயிற்றில் உள்ள செரிமான நெருப்புக்கு உணவு பிரசாதமாக அமையும். எனவே, நீங்கள் உண்ணும் உணவை உங்கள் கைகளால் எடுத்து சாப்பிட வேண்டும், பிரசாதம் இதயப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அறிவியல் காரணங்கள்

அறிவியலின் படி, கைகளால் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் கைகளில் தீங்கு விளைவிக்காத பாக்டீரியாக்கள் உள்ளன. அதேபோல, சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. மற்றவர்கள் பயன்படுத்திய ஸ்பூனை நீங்கள் பயன்படுத்தாமல், எப்போதும் கைகளால் சாப்பிடுங்கள்.

அதிகரித்த இரத்த ஓட்டம்

கைகளால் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரு வகையான தசை பயிற்சி என்று கூறப்படுகிறது. ஆதலால், இனிமேல் தவறாமல் கைகளால் எடுத்து சாப்பிடத் தொடங்குங்கள்.

வெப்பநிலை சென்சார்

நம் கைகளால் உணவை உண்ணும்போது, ​​நரம்பு முனைகள் உணவின் வெப்பநிலையை உணரும். நாம் என்ன சாப்பிடப் போகிறோம், உணவு எவ்வளவு சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கிறது என்பதற்கு ஏற்ப உங்கள் மூளையைத் தயார்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுர்வேதக் கண்ணோட்டத்தில், உணவைத் தொடுவதன் மூலம், குறிப்பிட்ட உணவை ஜீரணிக்க தேவையான நொதிகள் மற்றும் செரிமான சாறுகளைத் தயாரிக்க நரம்புகள் உடலுக்கு செய்தியை அனுப்புகின்றன. இதனால், நீங்கள் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணிக்கப் படுகிறது.

அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும்

நாம் கைகளால் சாப்பிடும்போது, பொதுவாக மெதுவாகதான் சாப்பிடுவோம். இதனால், அதிகமாகவோ அல்லது வேகமாகவோ சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

Related Post

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன? எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி பரவும் ஆபத்து

Posted by - September 7, 2023 0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள். அந்த…

அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இறுதி மரியாதை – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Posted by - December 14, 2024 0
எதையும் உள்ளத்திலிருந்து உரைக்கும் ஆற்றல் பெற்ற அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்தாரே! நெடிய அரசியல் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலில் பேரிழப்பாகும். கனத்த இதயத்துடன்…

தீபாவளிக்கு 1 நாள் மட்டுமே! தமிழ்நாட்டின் கடைத் தெருக்களில் குவிந்த மக்கள்

Posted by - October 19, 2025 0
#Diwali #HappyDiwali #Diwali2023 (or current year) #FestivalOfLights #DiwaliCelebration #DiwaliVibes #IndianFestival #Deepavali #DiwaliDecorations #DiwaliGifts #DiwaliSweets #DiwaliShopping #LightUpYourLife #JoyOfDiwali #FestiveSeason தீபாவளி முன்னிட்டு…

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *