நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில் வேற லெவல் வெற்றியைக் கொடுத்தது என்றே கூறலாம்.
இப்படத்திற்காக முதன்முறையாக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை எல்லாம் பெற்றார், அதன்பிறகு ஜெய் பீம், இப்படம் எந்த அளவிற்கு ஹிட் ஆனது என்பதுநமக்கே தெரியும்.
நடிகரின் பேட்டி
பாலிவுட் படமான Animal படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ப்ருத்விராஜ் ஒரு பேட்டியில் சூர்யா குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நடிகர் சூர்யா ஒரு பயங்கரமான நபர், Sel Centred Person, சினிமாவில் அவரது காலம் முடிந்துவிட்டது என பேசியுள்ளார்.
தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல், கங்குவா போன்ற படங்கள் வர உள்ளன.
அண்மையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பில் ரோப் கார் கேமராவின் ரோப் அறுந்து கீழே வந்ததில் சூர்யாவில் தோள்பட்டை மீது உரசியுள்ளது. இதனால் தோள்பட்டையில் காயம் ஏற்பட தற்போது ஓய்வில் உள்ளார்.