“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

179 0

பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி

நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர் ஒரு பச்சோந்தி என்றும் விமர்சித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடினார். கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும், தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டியதால் தான் பெருவெள்ளம் ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.வெள்ளம் வந்தபிறகு என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை தலைமைச் செயலாளர் கேட்டிருப்பது ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை காட்டுவதாக ஈபிஎஸ் விமர்சித்தார். மேலும் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததாக சொல்லிவிட்டு, தற்போது 50% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக கூறுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.இதனை தொடர்ந்து, வெள்ளப்பாதிப்பு குறித்து அரசை பிறகு விமர்சிக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் கமல்ஹாசனை தான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்றார். எதிர்வரும் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவில் எம்.பி. ஆக. கமல் முயற்சிப்பதாக எடப்பாடி விமர்சித்தார். மேலும், பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் என்று கூறிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருப்பதாக சாடினார். எனவே, கமல்ஹாசனின் கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை என்று கருதுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Post

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - October 19, 2024 0
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள…

தொகுதி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் ஒரு வார்ததை கூட பேசாத திமுக எம்.பி.க்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 10, 2024 0
வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை…

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு…

Posted by - May 26, 2023 0
வரும் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு…

மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு பதவியில் இருக்க கூச்சமா இல்லையா? – அமைச்சரை வெளுத்து வாங்கும் அண்ணாமலை

Posted by - February 14, 2025 0
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *