அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!

205 0

சென்னை:

கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யவில்லை என்றாலும், வடகிழக்கு பருவமழை நல்ல மழையைக் கொடுத்தது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், நீர் நிலைகள் நிரம்பின.

குறிப்பாக டிசம்பர் மாதம் கொட்டிய கனமழை பல்வேறு தரப்பினரையும் கடுமையாகப் பாதித்தது. மிக்ஜாம் புயல் காரணமாக இம்மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7  மாவட்டங்களில் கொட்ட போகுது மழை! | Which 7 districts will receive rain for  next 3 hours according to Chennai ...

கனமழை:

தலைநகர் சென்னையில் நகர் முழுவதும் மழை நீர் தேங்கிய நிலையில், அது வடியவே சில நாட்கள் வரை ஆனது. பிரதான சாலைகளில் நீர் உடனடியாக வடிந்தாலும், உட்புற சாலைகளில் மோட்டர் வைத்து நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாதிப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் தென்தமிழகத்தில் பல மணி நேரம் கேப் விடாமல் பெய்த மழை தென்தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டியது.

குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டிய நிலையில், அங்கும் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தன. இப்படி ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் இரு பகுதிகளில் கனமழை

அடுத்த 3 மணி நேரம்:

இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினமான இன்று காலையில் 3 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சில பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்பதால் கிறிஸ்துமஸ் நாளான இன்று வெளியே செல்ல திட்டமிடுபவர்கள் அதற்கேற்ப திட்டமிடவும்.

வானிலை மையம்:

முன்னதாக வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நேற்று முன்தினம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் இன்று டிச.25ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை டிச. 26ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல டிச. 29 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Posted by - September 12, 2023 0
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புள்ளவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள்…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குரல் கொடுத்த விஜய், ஓடி ஒளிந்த கமல்

Posted by - December 27, 2024 0
தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன்…

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் Smoke Biscuit?? அதிரடி உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை

Posted by - April 25, 2024 0
ஸ்மோக் பிஸ்கட்களை, குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை சிறுவன் ஒருவர் உட்கொண்டு துடிதுடித்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *