காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

218 0

எப்போதும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி செய்து போரடித்துவிட்டதா? சற்று சத்தானதாகவும், வித்தியாசமானதாகவும், அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறுமாறான ஒரு காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புட்டு செய்யுங்கள்.

அதுவும் வழக்கமாக செய்யும் புட்டை செய்யாமல், சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பைக் கொண்டு புட்டு செய்யுங்கள். இந்த புட்டு சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி  சாப்பிடுவாங்க.. | Moong Dhal Puttu Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு – 1/2 கப்

* கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை – 1 கப்

* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்த மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அதில் அரைத்த மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து வேக வைத்த இட்லிகளை எடுத்து, ஓரளவு குளிர்ந்ததும், அவற்றை உதிர்த்து விட வேண்டும்.

* பிறகு உதிர்த்து விட்டதை அளந்து பார்க்க வேண்டும். ஒரு கப் புட்டு மாவிற்கு 1/2 கப் சர்க்கரை என்று சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நீரை ஊற்றி கம்பி பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

* இறுதியாக அதில் உதிர்த்து வைத்துள்ள பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் நெய்யை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு புட்டு தயார்.

Related Post

முத்து முதலிடம்.. 2ம் இடம் பிடித்தது இவர்தான்! டாப் 5 உறுதியான லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் 8ம் சீசன் இன்று நிறைவு பெறுகிறது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஷோவில் முத்து தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்த தகவல் தான்.…

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

Posted by - August 14, 2023 0
ஷிவானி நாராயணன் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.…

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Posted by - April 10, 2024 0
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில்…

உஷார்… 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

Posted by - April 11, 2023 0
சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ

Posted by - October 5, 2023 0
நான்காவது நாள் பிக் பாஸ் 7 நான்காவது நாள் இன்று. வாங்கி பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். அதற்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *